தொழிலாளர் துறை அலுவலகங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - KALVIDHEEBAM

Latest

EDUCATIONAL UPDATES

Recent Tube

BANNER 728X90

Monday 19 November 2018

தொழிலாளர் துறை அலுவலகங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட தொழிலாளர் துறை அலுவலகங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.







இது குறித்து தொழிலாளர் உதவி ஆணையர் வெங்கடேசன் (அமலாக்கம்) விடுத்துள்ள செய்திக்குறிப்பு:சென்னை, தொழிலாளர் ஆணையர் அலுவலகம் மற்றும் சென்னை கூடுதல் தொழிலாளர் ஆணையர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட தொழிலாளர் துறை அலுவலகங்களில் காலியாக உள்ள 21 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் இனசுழற்சி விதிகளின் அடிப்படையில் நேரடி நியமனம் மூலமாக நிரப்பப்பட உள்ளன.இதற்கான வயது வரம்பு 1.7.2018 அன்று 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் 1.7.2018 அன்று 30 வயதுக்குள்ளும், பிற்படுத்தப்பட்ட வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் சீர்மரபினர் 32 வயதுக்குள்ளும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவைச்சார்ந்தவர்கள், ஆதரவற்ற விதவை ஆகியோர் 35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.மேலும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016 பிரிவு 20(8), (61), (63), (64) ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ள இனங்களுக்கு வயது உச்ச வரம்பில் விலக்கு உண்டு.இப்பணிக்கான விண்ணப்ப படிவம், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் மற்றும் இதர விவரங்களை www.labour.tn.gov.in/labour/recruitments.jsp.என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 







விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து உரிய இணைப்புகளுடன் 17.12.2018 அன்று மாலை 5.30 மணிக்குள் கூடுதல் தொழிலாளர் ஆணையர் அலுவலகம், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய கட்டம், 6வது தளம் டி.எம்.எஸ்., வளாகம், சென்னை-600006 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ கிடைக்கும் படி அனுப்பி வைக்கப்பட வேண்டும் என சென்னை கூடுதல் தொழிலாளர் ஆணையர் தெரிவித்துள்ளார்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment