தொழிலாளர் துறையில் காலியாக உள்ள 21 அலுவலக உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு - KALVIDHEEBAM

Latest

EDUCATIONAL UPDATES

Recent Tube

BANNER 728X90

Saturday 17 November 2018

தொழிலாளர் துறையில் காலியாக உள்ள 21 அலுவலக உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு

தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை, தொழிலாளர் ஆணையர் அலுவலகம் மற்றும் சென்னை கூடுதல் தொழிலாளர் ஆணையர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட தொழிலாளர் துறை அலுவலகங்களில் காலியாக உள்ள 21 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் இனசுழற்சி விதிகளின் அடிப்படையில் நேரடி நியமனம் மூலமாக நிரப்பப்பட உள்ளன.








 இதற்கான வயது வரம்பு 1.7.2018 அன்று 18 பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் 1.7.2018 அன்று 30 வயதுக்குள்ளும், பிற்படுத்தப்பட்ட வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் சீர்மரபினர் 32 வயதுக்குள்ளும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சார்ந்தவர்கள் மற்றும் ஆதரவற்ற விதவை ஆகியோர் 35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். 








இந்த பணிக்கான விண்ணப்ப படிவம், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் மற்றும் இதர விவரங்களை https://www.labour.tn.gov.in/Labour/recruitments.jsp என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய இணைப்புகளுடன் 17.12.2018 அன்று மாலை 5.30 மணிக்குள் கூடுதல் தொழிலாளர் ஆணையர் அலுவலகம், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய கட்டிடம், 6வது தளம், டி.எம்.எஸ் வளாகம், சென்னை-6 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ கிடைக்கும்படி அனுப்பி வைக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment