டிச.2-இல் முத்திரைக் கொல்லர் பதவிக்கான எழுத்துத் தேர்வு - KALVIDHEEBAM

Latest

EDUCATIONAL UPDATES

Recent Tube

BANNER 728X90

Saturday 17 November 2018

டிச.2-இல் முத்திரைக் கொல்லர் பதவிக்கான எழுத்துத் தேர்வு


தொழிலாளர் துறையில் காலியாக உள்ள முத்திரைக் கொல்லர் பதவிக்கான எழுத்துத் தேர்வு டிசம்பர் 2-ஆம் தேதி நடைபெற உள்ளது.




இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அ.வளர்மதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முத்திரைக் கொல்லர் பதவிக்கான எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்டம், காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள எஸ்.ஆர்.எம்.தொழில்நுட்பக் கல்லூரியில் டிசம்பர் 2-ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது.


இத்தேர்வில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்களுக்கு நுழைவுச் சீட்டு ஏற்கெனவே தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. நுழைவுச்சீட்டு பெறாதவர்கள் தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் திருவள்ளூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை (அமலாக்கம்) வேலை நாள்களில் அணுகி நுழைவுச் சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம். 



மேலும் விவரங்களுக்கு 044 27667117 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment