பள்ளி பாட புத்தகங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளன. தேவையிருப்பின் மாணவர்கள் படித்து, பிரின்ட் எடுத்து கொள்ளலாம்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம், தமிழ்நாடு பாடநுால் கழகம் இணைந்து பாட புத்தகங்களை தயாரிக்கிறது.
புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையின் ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கான பாடநுால் தயாரிக்கப்பட்டு, மாணவர்களுக்கு வினியோகிக்கப்பட்டுள்ளது.அதனை அடிப்படையாக கொண்டு, தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், மாணவர்கள் தங்கள் பாடப்புத்தகங்களை எளிதில் படிக்க, தேவையிருப்பின் பிரின்ட் அவுட் எடுக்க, பி.டி.எப்., வடிவில் படிக்க, www.tnscert.org என்ற இணையதளத்தில் பாடப்புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளது.இந்த இணையதளத்தில், மாணவர்கள் தங்களுக்கு விருப்பப்பட்ட பாடம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம் என, கல்வித்துறையினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment