தேர்வில் மாணவர்கள் எவ்வாறு சாதிப்பது, தேர்வை எவ்வாறு பயமின்றி, கவலையின்றி எதிர்கொள்வது,தேர்விற்கு எவ்வாறு மாணவர்கள் தயாராவது, தேர்விற்காக மாணவர்களை பெற்றோர்கள் எப்படி தயார்படுத்துவது என்பது பற்றி மன ரீதியிலான ஆலோசனை வழங்க சி.பி.எஸ்.இ. திட்டமிட்டு உள்ளது.
அதன்படி, இந்த மனரீதியிலான ஆலோசனை இன்று முதல் ஏப்ரல் 4ம் தேதி வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்து பெற்றோர்கள், மாணவர்கள் அறிந்துகொள்ளவும், கவுன்சிலிங் பெறவும், 1800118004 என்ற எண்ணிற்கு அழைக்க வேண்டும் என்று சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது. அதே போல www.cbse.nic.in என்ற இணையதளத்தில் உள்ள காணொலி மூலமாகவும் இந்த மன ரீதியிலான ஆலோசனையை பெறலாம் என்று சி.பி.எஸ்.இ தெரிவித்துள்ளது. கல்வி தீபம் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.
No comments:
Post a Comment