12 வயதில் 26 மொழி பேசும் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த சிறுவன் At the age of 12, 26 languages will be spoken
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த, 12 வயது அக்ரம் என்ற மாணவன் 26 மொழிகளில் பேசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்
இளையான்குடி ஐ.என்.பி.டி.,மெட்ரிக்குலேஷன்பள்ளி ஆண்டுவிழாவில் அக்ரம் பேசியதாவது
4 வயதில் மொழிகளின் மீது எனக்கு இருந்த தனித்திறமையை பார்த்து, என் தந்தை அப்துல் ஹமீத் பல மொழிகளை கற்க வாய்ப்பு ஏற்படுத்தி தந்தார். இன்டர்நெட் மூலம், பல மொழிகளை கற்றேன்
எந்த மொழியாக இருந்தாலும், இரண்டு, மூன்று நாட்களில் கற்று விடுவேன். தற்போது, இஸ்ரேல் பள்ளியில் ஆன்லைன் மூலம் கல்வி பயில்கிறேன். இதுவரை 25க்கும் மேற்பட்ட நாடுகள் சென்று வந்துள்ளேன்
இது எனக்கு 148 வது நிகழ்ச்சி.நினைவாற்றல் குறைந்து விடுமோ என்பதால், சிறுவயதில் இருந்தே, சாக்லேட், ஐஸ்கிரீம், ஜங்க்புட் உண்பதோ, டிவி, வீடியோகேம் விளையாடுவதோ கிடையாது
அனைவரும் ஜங்க் புட்' உண்பதை விடுத்து சோளம், கம்பு, கேழ்வரகு, சாமை போன்ற சிறுதானிய உணவு வகைகளையே உண்ண வேண்டும்
இதில் தான் அனைத்து சத்துக்களும் உள்ளன. மாணவர்களுக்கு ஆங்கிலம், இந்தி, உருது, அரபி, சைனீஸ், பிரெஞ்ச் ஆகிய 5 மொழி தெரிந்தால் போதும், இந்த உலகத்தையே ஆளலாம், என்றார்கல்வி தீபம் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.
No comments:
Post a Comment