அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும் போராட்டம் தொடரும்: ஜாக்டோ-ஜியோ - KALVIDHEEBAM

Latest

EDUCATIONAL UPDATES

Recent Tube

BANNER 728X90

Monday 28 January 2019

அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும் போராட்டம் தொடரும்: ஜாக்டோ-ஜியோ

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும் போராட்டம் தொடரும் என்று ஜாக்டோ - ஜியோ அமைப்பின் நிர்வாகி பெருமாள்சாமி கூறியுள்ளார்.




ஊதிய முரண்பாடுகளைக் களைதல், பழை ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ அமைப்பின்கீழ் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கடந்த 22-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.




இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இன்று பணிக்கு திரும்பாவிட்டால், அவர்களின் பணியிடங்கள் காலிப் பணியிடங்களாகக் கருதப்பட்டு அறிவிக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.


அரசின் எச்சரிக்கைக்கு செவிசாய்க்காத அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும் போராட்டம் தொடரும் என ஜாக்டோ - ஜியோ அமைப்பின் நிர்வாகி பெருமாள்சாமி கூறியுள்ளார்.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை தமிழக அரசு அழைத்து பேச வேண்டும் என கூறினார்.



போராடும் அரசு ஊழியர்களை அரசு அச்சுறுத்தவில்லை என்றும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை அச்சுறுத்த நாங்கள் என்ன பங்கரவாதிகளா? என அமைச்சர் ஜெயகுமார் கேள்ழி எழுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.



இதனிடையே தலைமை செயலக ஊழியர்கள் சங்க அலுவலகம் முன்பு, ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைமை செயலக ஊழியர்களின் போராட்டத்தால் தலைமை செயலக பணிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்கல்வி தீபம் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.

No comments:

Post a Comment