போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் மீண்டும் பணியில் சேர விரும்பினால் முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் எஸ்எம்எஸ், வாட்ஸ் ஆப் மூலம் தகவல் தெரிவித்துவிட்டு பணியில் சேரலாம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் ராமேஸ்வரமுருகன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவர்களுக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சார்பில் கால வரையற்ற வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.
அவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக நீதிமன்ற உத்தரவுகள் ஏதும் பெறாத நிலையிலும், பெரும்பான்மையான ஆசிரியர்கள் பணியில் சேர விருப்பம் தெரிவித்துள்ள நிலையிலும், நாளை(இன்று)9 மணிக்குள் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்களிடமும், உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி ஆசிரியர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடமும் நேரிலோ, தொலைபேசி மூலமாகவோ, எஸ்எம்எஸ், வாட்ஸ் ஆப் மூலமாகவோ தகவல் தெரிவித்துவிட்டு பணியில் சேர, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
அப்படி குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் ஆசிரியர்கள் பணியில் சேராவிட்டால், அப்பணியிடங்கள், காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்பட்டு, அந்த இடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி தீபம் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.
No comments:
Post a Comment