இந்தியாவின் இன்டெர்நெட் புரட்சிக்கு மிகப்பெரிய பங்கு உள்ள நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்தை நடத்திவரும் அம்பானியின் ஜியோ நிறுவனம் தான் குறைந்த விலைக்கு அதிக வேகம் கொண்ட இன்டர்நெட்டை அவர் அறிமுகப்படுத்தியது. இன்று கிராமங்களில் உள்ள மூலை முடுக்குகளில் உள்ளவர்கள் கூட இன்று இன்டர்நெட்டை பயன்படுத்துகின்றனர்.
ஆனால் அவ்வப்போது சிலருக்கு ஜியோ சிம்மில் சில பிரச்னைகள் ஏற்படுவதாக கூறிவருகின்றனர். தொழிற்நுட்ப உலகில் சிலருக்கு இவ்வாறான பிரச்னைகள் வருவது சகஜம் தான். இந்நிலையில் ஒருவர் தனக்கு ஜியோ ஒர்க் ஆகவில்லை என காமெடியாக அம்பானியிடமே நேரடியாக புகார் செய்துள்ள சுவாரஸ்யமான சம்பவம் சமீபத்தில் நடந்தது.
பாலிவுட் திரைப்பிரபலமான தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் கபூர் ஆகியோர் கடந்த நவ.14ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண வரவேற்ப்பு நிகழ்ச்சி மும்பையில் கடந்த டிச. 1ம் தேதி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பணக்காராகவும், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை நடத்தி வருபவருமான முகேஷ் அம்பானி தனது மனைவி நீட்டா அம்பானி, மகள் ஈஷா, மகன்கள் ஆகாஷ் மற்றும் ஆனந்த் ஆகியோருடன் கலந்துகொண்டனர்.
அவர்கள் திருமணமான தம்பதிகளுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொள்வதற்காக போட்டோவிற்கு போஸ் கொடுத்தனர். அப்பொழுது புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த போட்டோகிராஃபர் ஒருவர் காமெடியாக "சார், ஜியோ நஹி சல் ரஹா!" என்று கூறினார்.
அப்படி என்றால் "சார் ஜியோ சரியாக இயங்கவில்லை" என்று பொருள். இதை கேட்டதும். அங்கிருந்த அம்பானி உட்பட அனைவரும் சிரித்தனர்.
அதன் பின் அம்பானி அங்கு வந்த சஞ்சய் தத்துடன் கை குலுக்கி இந்த சூழ்நிலையை கடந்து அவருடன் பேச சென்று விட்டார். போட்டோகிராபர் சொன்ன இந்த வார்த்தையை அம்பானி கேட்டாரா என சரியாக சொல்லி விட முடியாது.
இருந்தாலும் ஜியோ ஒர்க் ஆகவில்லை என நேரடியாக அம்பானியிடமே முறையிட ஒரு "தில்" வேணும் தானே. யாருப்பா அந்த போட்டோகிராஃபர் எனக்கே பார்க்கனும் போல இருக்குன்னு நீங்க நினைக்குறது எங்களுக்கு கேட்குது..!
No comments:
Post a Comment