கல்வி தீபம் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைபெற உள்ளது. அதற்கான தரவரிசைப் பட்டியல் வரும் மார்ச் 31-ஆம் தேதியன்று வெளியிடப்படும். இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
ஒற்றைச் சாளர முறையின் கீழ் கலந்தாய்வு நடத்தப்பட்டு மருத்துவ மேற்படிப்புகளுக்கான இடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதன்படி ஏப்ரல் 1-ம் தேதி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முதலில் கலந்தாய்வு நடத்தப்படும்.
இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 5-ஆம் தேதி வரையில் பொதுக் கலந்தாய்வு நடைபெறும். மே 1-முதல் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான வகுப்புகள் தொடங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு 124 இடங்களை அதிகரிக்க மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்திருந்தது.
இதனிடையே, பல ஆண்டு காலமாக இருந்து வரும் முதுநிலை மருத்துவப் பட்டயப் படிப்பு இடங்களை, பட்ட மேற்படிப்புகளாக மாற்றுவதற்கு மாநில மருத்துவக் கல்வி இயக்குநரகமும் அண்மையில் விண்ணப்பித்திருந்தது. அதனைப் பரிசீலித்த இந்திய மருத்துவக் கவுன்சில் வாரிய உறுப்பினர்கள், 384 பட்டயப் படிப்பு இடங்களை பட்டப் படிப்புகளாக மாற்ற தற்போது அனுமதி அளித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, வரும் கல்வியாண்டில் (2019- 20) மாநிலத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் 1,758-ஆக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
NEET 2019: NEET EXAM TIPS SUCCESS - தோ்வா்களை தயாா் படுத்திக்கொள்ள எளிய வழிகள் !!
ReplyDeleteIt proved to be Very helpful to me and I am sure to all the commentators here! CBD Gummies
ReplyDelete